செய்திகள்
விபத்து

ஆண்டிப்பட்டியில் சைக்கிள் மீது கார் மோதல்- முதியவர் பலி

Published On 2021-07-01 09:46 GMT   |   Update On 2021-07-01 09:46 GMT
ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த திருப்பூர் வள்ளலார் நகரை சேர்ந்த குமார் என்பவரை கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 61). இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து ஆண்டிப்பட்டி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வைகை அணை சாலை வழியாக அவர் வந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று அவரது சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட மாடசாமி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாடசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த திருப்பூர் வள்ளலார் நகரை சேர்ந்த குமார் என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News