செய்திகள்
கைது

ஓச்சேரி அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது

Published On 2021-06-23 10:16 GMT   |   Update On 2021-06-23 10:16 GMT
போலீசார் விசாரணையில் மாமண்டூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த குட்டி என்ற பெருமாள் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது.
காவேரிப்பாக்கம்:

ஓச்சேரி அடுத்த அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்சக்ரவர்த்தி மற்றும் போலீசார் நேற்று மாமண்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டின் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து அங்கு சென்று மது விற்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மாமண்டூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த குட்டி என்ற பெருமாள் (வயது 45) என்பதும், கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 17 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பெருமாளை போலீசார்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News