செய்திகள்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் வரி குறைப்புக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published On 2021-06-20 07:21 GMT   |   Update On 2021-06-20 07:21 GMT
கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: 

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். திமுக அரசு எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் ஒருவர் ரூ.1 வரி செலுத்தினால் அதில் 4 பைசா மட்டுமே தமிழக அரசுக்கு கிடைக்கிறது. கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை.



தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை. மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாய் 63% அதிகரித்துள்ளது என்றார். 
Tags:    

Similar News