செய்திகள்
கோவை மாநகரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேர் கைது
பீளமேடு, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனை மீறி செல்வபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 90 மது பாட்டில்கள் ஒரு மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.