செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் பள்ளியில் மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வழங்கி தொடங்கிவைத்தார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2021- 22 கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது. சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வழங்கி தொடங்கிவைத்தார். பள்ளி தலைமையாசிரியை செல்வி, மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
அதேபோன்று 2021-22- ஆம் கல்வியாண்டிற்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்கான விலையில்லா பாடப் புத்தகங்களை திருப்பத்தூர் முதன்மை சேமிப்பு கிடங்கில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பி வைத்தார்.
வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலர் எம்.முனிமாதன், திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் மு.மணிமேகலை மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் தனராஜ், தாமோதரன், வட்டார கல்வி அலுவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2021- 22 கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது. சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வழங்கி தொடங்கிவைத்தார். பள்ளி தலைமையாசிரியை செல்வி, மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
அதேபோன்று 2021-22- ஆம் கல்வியாண்டிற்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்கான விலையில்லா பாடப் புத்தகங்களை திருப்பத்தூர் முதன்மை சேமிப்பு கிடங்கில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பி வைத்தார்.
வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலர் எம்.முனிமாதன், திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் மு.மணிமேகலை மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் தனராஜ், தாமோதரன், வட்டார கல்வி அலுவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.