செய்திகள்
ஆற்காட்டில் நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- தொழிலாளி பலி
ஆற்காடு பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது சகாயம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராசாத்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயம் (வயது 54), கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி உஷா, உறவினர் சாரதா ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் ராசாத்தி புரத்திலிருந்து ராணிப்பேட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியபோது ஆற்காடு பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது சகாயம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதில் சகாயம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி உஷா, உறவினர் சாரதா ஆகியோர் காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராசாத்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயம் (வயது 54), கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி உஷா, உறவினர் சாரதா ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் ராசாத்தி புரத்திலிருந்து ராணிப்பேட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியபோது ஆற்காடு பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது சகாயம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதில் சகாயம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி உஷா, உறவினர் சாரதா ஆகியோர் காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.