செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
நாமக்கல், ராசிபுரம், செவந்திப்பட்டி, ரெட்டிப்பட்டி, வேப்பனம்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து இருந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 352 பேர் பலியாகி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த நாமக்கல், ராசிபுரம், செவந்திப்பட்டி, ரெட்டிப்பட்டி, வேப்பனம்புதூர் ஆகியபகுதிகளை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 357 ஆக அதிகரித்து உள்ளது.