செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

Published On 2021-06-14 12:59 GMT   |   Update On 2021-06-14 12:59 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 352 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து இருந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 346 பேர் பலியாகி இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த நாமக்கல், வடுகம்பாளையம், பேளுக்குறிச்சி, ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர். இதனால் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 352 ஆக அதிகரித்து உள்ளது.
Tags:    

Similar News