செய்திகள்
கோவை அருகே வீடு புகுந்து பணம் திருட்டு
கோவை அருகே வீடு புகுந்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ராம்நகர் காளப்பன் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). சம்பவத்தன்று இவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் இருந்த ரூ 10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.