செய்திகள்
கச்சிராயப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறி திறந்த 3 கடைகளுக்கு சீல்
கச்சிராயப்பாளையம் பகுதியில் ஊரடங்கை மீறி திறந்த 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்:
கச்சிராயப்பாளையம் பகுதியில் சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வதாக வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சின்னசேலம் மண்டல துணை தாசில்தார் உமா தலைமையில் வருவாய்த்துறையினர் கச்சிராயப்பாளையம், மாத்தூர், எடுத்தவாய்நத்தம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த 3 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.