செய்திகள்
வழக்கு பதிவு

எருமப்பட்டி அருகே கடைக்காரரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Published On 2021-05-19 13:21 GMT   |   Update On 2021-05-19 13:21 GMT
எருமப்பட்டி அருகே கடைக்காரரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள செவிந்திப்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்பலம் மகன் கண்ணன் (வயது 35). இவர் அந்த பகுதியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். கண்ணன் அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி (60) என்பவரிடம் இருந்து 2 சென்ட் நிலத்தை வீட்டுடன் சேர்த்து வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் பாப்பாத்தி வசித்து வருகிறார். சம்பவத்தன்று பாப்பாத்தி அந்த வீட்டை சீரமைத்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு சென்ற கண்ணன், எனது வீட்டை சீரமைக்க வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாப்பாத்தியின் தங்கை இலக்கியம் (45), இவருடைய கணவர் கணேசன் (50), மகன் விஜயகுமார் (27) ஆகியோர் சேர்ந்து, கண்ணனை தாக்கினர். இதுகுறித்து கண்ணன் எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இலக்கியம், கணேசன், விஜயகுமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News