செய்திகள்
புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் கடந்த 15-ந்தேதியில் இருந்து பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 15-ந்தேதியில் இருந்து முதல் தவணையாக ரூ.2000 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2,14,950 புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை கொரோனா நிதியான ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.