செய்திகள்
மழை

தாராபுரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

Published On 2021-05-07 22:26 GMT   |   Update On 2021-05-08 09:44 GMT
தாராபுரத்தில் நேற்று இடி, மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தாராபுரம்:

தாராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று இடி, மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணி வரை நீடித்தது. சூறைக்காற்றால் அலங்கியம் சாலை பகுதியில் மின் கம்பிகள் உரசியதில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது.

இதனால் தாராபுரத்தை சுற்றியுள்ள கோவிந்தாபுரம், அலங்கியம், தளவாய்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்டு வந்த நிலையில் மாலையில் மழை பெய்ததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மேலும் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மழைகாரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
Tags:    

Similar News