செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 222 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மேலும் 222 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
மாவட்டத்தில் 1,828 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 917 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.