செய்திகள்
கோப்புப்படம்

சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை

Published On 2021-05-06 01:36 GMT   |   Update On 2021-05-06 01:36 GMT
சென்னையில் கிண்டி, கத்திப்பாரா உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
சென்னை:

சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் காரணமாக கடுமையான வெயில் கொளுத்துகிறது.

இந்த வெப்பம் காரணமாக மக்கள் இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தனர்.

இந்த நிலையில் சென்னை வாசிகளை மகிழ்விக்கும் விதமாக இன்று காலை திடீர் மழை கொட்டியது.

சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஆலந்தூர், அசோக் நகர், அடையாறு, கிண்டி, கத்திப்பாரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையில் லேசான மழை கொட்டியது. உஷ்ணத்தில் தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதல் அளித்தது.


Tags:    

Similar News