செய்திகள்
கொலை

சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை- மனைவி படுகாயம்

Published On 2021-04-29 10:50 GMT   |   Update On 2021-04-29 11:04 GMT
சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திரு.வி.க.நகர்:

சென்னை புளியந்தோப்பு குமாரசாமி முதல் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருடைய மனைவி சாலம்மாள். இவர்களுக்கு தட்சிணாமூர்த்தி, சாந்தமூர்த்தி, ராமமூர்த்தி, சிகாமணி, ராமலிங்கம் ஆகிய 5 மகன்களும், வாசுகி(வயது 55), ஆனந்தி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

இவர்களில் தட்சிணாமுர்த்தி இறந்தவிட்டார். மற்ற அனைவரும் திருமணமாகி தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

நேற்று மாலை ராமலிங்கம் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாசுகி, தனது கணவர் மோகனுடன் (62) வந்து கலந்து கொண்டார். அப்போது புளியந்தோப்பு குமாரசாமி ராஜா தெருவில் 600 சதுர அடி பரப்பளவில் உள்ள தங்களது பூர்வீக சொத்து தொடர்பாக சகோதர, சகோதரிகள் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது சிகாமணியின் மனைவி மேரி, மகன் தமிழ்ச்செல்வன், மகள் சுபா, மருமகள் சதீஷ்குமார் ஆகியோர் வாசுகி மற்றும் மோகனிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன்-மனைவி இருவரையும் தாக்கி, கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் இருவரும் கீழே விழுந்து மயங்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த வாசுகி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News