search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் அடித்துக்கொலை"

    திருச்சி அருகே மணல் திருட்டு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
    முசிறி:
     
    திருச்சி மாவட்டம்  முசிறியை அடுத் த திண்ணக்கோணத்தை சேர்ந்தவர் சிறுசோழன் (வயது 72), விவசாயி. இவர், திண்ணக்கோணம் பகுதியில் நடைபெற்று வரும் மணல் திருட்டு குறித்து அவ்வப்போது போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முசிறி போலீஸ் நிலையத்தில் சிறுசோழன் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் மணல் திருட்டு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், தன்னை சிலர் தாக்கியதோடு, கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும், அந்த கும்பல்  மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் புகார்  குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மணல் கடத்தல் கும்பலால் தாக்கப்பட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுசோழன் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். நேற்று அவர் வீட்டில் இருந்த போது திடீரென உயிரிழந்தார். 

    மணல் கடத்தல் கும்பல் தாக்கப்பட்டதில் காயமடைந்து சிறுசோழன் உயிரிழந் துள்ளார். எனவே இதற்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று  அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×