செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைந்தது

Published On 2021-04-29 05:07 GMT   |   Update On 2021-04-29 05:07 GMT
கொரோனா தொற்று அதிகரிப்பு, பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல்:

கெரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பிற மாநிலங்களில் பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுடெல்லியில் ஒரு வாரம் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக முட்டை விற்பனை சரிவைச் சந்தித்தது.

இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா தொற்று அதிகரிப்பு, பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 3.95ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 

Tags:    

Similar News