செய்திகள்
தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-04-28 10:05 GMT   |   Update On 2021-04-28 10:05 GMT
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசி ஜீவா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ரகுவரன் (வயது 37). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அவரது மனைவி லதாவிடம் ஏற்பட்ட தகராறில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) கலந்து குடித்துள்ளார். இதனால் அவருக்கு நள்ளிரவில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரிக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News