செய்திகள்
களக்காடு அருகே கடமான்கள் நாசம் செய்த வாழைத்தார்கள்

கடமான்கள் அட்டகாசத்தால் வாழைத்தார்கள் நாசம்- விவசாயிகள் கவலை

Published On 2021-04-28 05:03 GMT   |   Update On 2021-04-28 05:03 GMT
இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் கடமான்கள் வாழை தோட்டங்களுக்குள் புகுந்து, வாழைத்தார்களை தின்று நாசம் செய்கின்றன.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் பயிர் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடமான்கள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் கடமான்கள் வாழை தோட்டங்களுக்குள் புகுந்து, வாழைத்தார்களை தின்று நாசம் செய்கின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மஞ்சுவிளையை சேர்ந்த விவசாயி சில்கிஸ் சாமு வேல் (47) என்பவரது தோட்டத்தில் ஏராளமான வாழைத்தார்களை கடமான்கள் நாசம் செய்துள்ளன. இவைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகள் ஆகும்.

வாழைத்தார்களை அறுவடை செய்யும் நிலையில் கடமான்கள் தின்று சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தினசரி கடமான்கள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கரடிகளும் உலா வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே கடமான்கள் நாசம் செய்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விளைநிலங்களுக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் கடமான்களையும், கரடிகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News