search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கவலை"

    • சுமார் 150 ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாயமாக மொச்சை பயிர் மற்றும் தட்டைப்பயறு ரகம் பயிரிடப்பட்டு வருகிறது.
    • கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் செடி மற்றும் காய்களில் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள சிலமலை, சூலபுரம் கரட்டுப்பட்டி ராசிங்கபுரம் ராணி மங்கம்மாள் சாலை பகுதிகளில் சுமார் 400 ஏக்கருக்கும் மேல் நாட்டு ரக மொச்சை பயிறு, நாட்டு ரக தட்டை பயிறு மற்றும் ஆம்பூர் ரக வீரிய ரக தட்டை பயிறு வகைகள் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

    இதில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாயமாக மொச்சை பயிர் மற்றும் தட்டைப்பயறு ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை மொச்சைப்பயிறு மற்றும் தட்டைப் பயிறு வகையில் பெருமளவில் விவசாயம் செய்யப்பட்டு வெளியூர்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் மொச்சை பயிர்கள் எண்ணெய் மற்றும் புரத சத்துகள் அதிகம் உள்ளதால் வெளிச்சந்தையில் தேனி மாவட்டத்தில் விளையும் மொச்சை பயிறு வகைகளுக்கு என்றும் மதிப்பு அதிகம் உள்ளது.

    டிசம்பர் மாதம் காலத்தில் பனிப்பொழிவு அதிகரிக்க அதிகரிக்க மொச்சை பயிர் சாகுபடி அதிகரிக்கும். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் செடி மற்றும் காய்களில் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    பலமுறை மருந்தடித்தும் உரங்கள் இட்டும் பெய்த மழை காரணமாக மருந்தின் ஆற்றல் குறைந்து புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் கொள்முதல் விலை கிலோ ரூ.15 முதல்ரூ.20 வரை மட்டுமே பெறப்படுவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    • தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக ஒரு வார காலமாக சானலில் தண்ணீர் விடவில்லை
    • முறையாக தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். கன்னிப் பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிபாறை அணை திறக்கப்பட்டது.

    அணை பாசனத்தை நம்பியும் குளத்து பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி செய்தனர். 6000 ஹெக்டேரில் மாவட்ட முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பல்வேறு பகுதிகளில் அறுவடைப்பணி தொடங்கி நடந்து வருகிறது.ஆனால் ஒரு சில பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளன.

    ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக ஒரு வார காலமாக தோவாளை சானலில் தண்ணீர் விடவில்லை. தற்பொழுது தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் முறையாக தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

    நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை போர்க்கால அடிப்படையில் கடைமடை பகுதியில் வரை திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடு என சரிந்து வருகிறது. பேச்சிபாறை நீர்மட்டம் இன்று காலை 17.65 அடியாக உள்ளது.அணைக்கு 381 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 27.75 அடியாக உள்ளது.அணைக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் நீர்மட்டம் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க பாசன குளங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகளில் கவலை ஏற்படுத்தி உள்ளனர்.

    • கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்.
    • கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்.

    மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 -ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தென்மேற்கு பருவமழை

    கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. இதனால் முன்கூட்டியே மே மாதம் 24-ல் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்கவில்லை இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    ஏமாற்றம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கும் போது கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது அணையில் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறித்த நாளான நேற்று கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை இதனால் கால்வாய் பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே கர்நாடகா அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நிலுவையில் உள்ள தண்ணீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்வாய் பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • விவசாயிகள் தங்களின் கரும்புகளை எடுத்துச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர் பாகம்பாளையம், சானார் பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், கொத்த மங்கலம், ஆனங்கூர், ஜேடர்பா ளையம், கவுண்டம்பாளையம், திடுமல், சிறு நல்லி கோவில், குரும்பல மகாதேவி, ஜமீன் இளம்பள்ளி ,சோழசிரா மணி, மாரப்பம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயி ரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    வெல்லம் தயாரிப்பு

    விவசாயிகள் தங்களின் கரும்புகளை எடுத்துச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலை களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2800 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்ற னர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியா பாரி களுக்கும், அருகாமை யில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக் கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம். உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,230-க்கும், அச்சு வெல்லம் ரூ.11,70- க்கும் விற்பனையானது.

    தற்போது 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,235-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,200-க்கும் விற்பனை யானது. கரும்பு ஒரு டன் ரூ.2800 வரை விற்பனை யாகிறது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பல் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • இந்த தேங்காய் அதிகபட்சம் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தென்னை விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக பெய்த மழையால், வழக்கத்தை விட மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விற்பனை சரிந்துள்ளது.

    மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரில் 35 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை விவசாயிகள் தேங்காய்கள் அறுவடை செய்கின்றனர்.

    தற்போது தேங்காய் சராசரியாக டன் ரூ.20 ஆயிரம் என விற்பனையாகிறது. ஒரு தேங்காய் ரூ.8-க்கு விற்பனையாகிறது.

    இதில் தேங்காய் மரத்தில் இருந்து பறிப்பு, உரிப்பு கூலியாக ரூ.4 வரை செலவாகிறது. மீதமுள்ள ரூ.4 பராமரிப்பு பணிகளுக்கு செலவாகிறது.

    இந்தநிலையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இந்த தேங்காய் அதிகபட்சம் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அதன்பிறகு கொப்பரையாக மாறும். இல்லாவிட்டால் கெட்டுப்போகும்.

    அடுத்த 6 மாதங்களில் 5 கோடி தேங்காய் தேக்கமடைந்து, வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தேங்காய்களை கொள்முதல் செய்து, கொப்பரையாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை கொண்ட பேரிக்காய் போன்ற பழங்கள் தற்போது மலைப்பகுதியில் இந்த ஆண்டு விளைச்சலானது முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது .
    • பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொடைக்கானல் பாம்பார்புரம் , அப்சர்வேட்டரி, செண்பகனூர், சின்ன பள்ளம், பெரும்பள்ளம் , நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வாங்கி செல்லும் பழங்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை கொண்ட இந்த வகை பழங்கள் தற்போது மலைப்பகுதியில் இந்த ஆண்டு விளைச்சலானது முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது .

    சில இடங்களில் மட்டுமே பேரிக்காய் விளைச்சல் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். மரங்களில் உள்ள நோய்கள் குறித்தும் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மலைகிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.
    • பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் பல ஆயிரம் எக்டேர் அளவிற்கு வருடம் தோறும் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்து வருகின்றனர்.

    இந்த மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.

    இதனால் பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.

    குறிப்பாக தருமபுரி மாவட்ட பகுதிகளில் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் தென்கரை கோட்டை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல 100-க்கும் மேற்பட்ட கிராமத்தில் விவசாயிகள் அதிக அளவாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.

    பல நேரங்களில் மரவள்ளி பயிரிட்ட விவசாயிகளுக்கு செலவு செய்த பணம் கூட வர முடியாத நிலையில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது இந்த பூச்சிகளின் நோய் தாக்குதலால் செடிகள் இலைகள் பழுத்து காய்ந்து உதிர்ந்து வருகிறது.

    இதனால் மகசூல் பெருமளவு குறையும் என்று விவசாயிகள் தெரிவித்து பெரும் கவலையடைந்து வருகின்றனர்.

    இவற்றை தடுக்க வேளாண்மை துறை அதிகாரிகள் பஞ்சாயத்து பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடுகள் செய்து அவற்றை தடுப்ப தற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அபிராமம்

    கடந்த ஆண்டு ராமநாத புரம் மாவட்டம் முழுவதும் பருவமழை பொய்த்ததால் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகையும், வறட்சி நிவாரணமும் இன்று வரை வழங்கப்பட வில்லை. மேலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனையும் இன்றுவரை தள்ளுபடி செய்யவில்லை.

    நெல், உரம், உழவு செய்யும் கூலி உயர்வு காரணமாகவும், வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாகவும் விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருந்ததில் எந்தவித பயனுமில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்கி குவித்து வீட்டுமனைகளாகவும், பிளாட்டுகளாகவும் மாற்றிவிட்டனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் என்பது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கடும் வறட்சி, புயல், வெள்ள சேதம் என்றாலே பாதிக்கப்படுவது நாங்கள் தான். அபிராமம் பகுதியில் நெல், மிளகாய், பருத்தி விவசாயம்தான் அதிகமாக உள்ளது. அதிகமாக மழை பெய்தா லும், வறட்சியானலும் பாதிக்கப்படுவது நாங்கள்தான். விவசாயம் செய்வதற்கு வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் எந்த பயனும் இல்லாததால் விரக்தியில் இருக்கிேறாம்.

    அப்படிபட்ட விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்றார்.

    • ஒரு மூட்டை வெற்றிலை குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
    • இந்த வாரம் ஒரு மூட்டைக்கு பத்தாயிரம் வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்ட கடத்தூர் பகுதியில் வெற்றிலை விற்பனை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஒரு மூட்டை வெற்றிலை அதிகபட்சமாக ரூ.38 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த வாரம் விலை குறைந்து 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஒரு மூட்டைக்கு பத்தாயிரம் வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பருத்தியை தாக்கும் நோயால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • கோடை காலத்தில் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை இல்லததால் நெல் விவசாயம் பாதிக்கப் பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். காலையில் பனிபொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து ள்ளதால் பருத்தியில் இலை சுருட்டு புழு தாக்குதல் உள்ளது.

    அபிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதியான அச்சங்குளம். தீர்த்தாண்ட தானம் வல்லகுளம் டி.புன வாசல் பள்ளபச்சேரி. அகத்தாரிருப்பு பாப்பனம் பொட்டகுளம் முத்தனேரி வேப்பங்குறிச்சி விரதக்கு ளம் உடைய நாதபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்து ள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய் குளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர் பருத்தி செடிகளை பொருத்தவரை லேசான ஈரப்பதத்திலும் கடும் வறட்சி நேரத்தில் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இதனால் கோடை சாகுபடியாக பருத்த சாகுபடி செய்வதில் அபிராமம் பகுதி விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வந்தாலும் இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாததால் வெயில் கொடுமை அதிகரி த்ததாலும் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் பருத்தியை நோய் தாக்கி வருகிறது.

    குறிப்பாக இலை சுருட்டு புழு நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன் பருத்தியில் இலை சுருட்டு புழு தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • விவசாயிகள் மரங்களை பராமரித்து காய் பறிப்பிற்கு ரூ.1000 கூலி, காய்களை எடுக்க வரும் நபருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில் இந்த விலை தங்களுக்கு மிகவும் குறைவு என்று வேதனையடைந்துள்ளனர்.
    • அரசு இப்பகுதியில் இலவம்பஞ்சுக்கான தொழிற்சாலை அமைத்தால் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள்

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலை ஒன்றியத்தில் ஏராளமான விவசாயிகள் இலவ மரம் வைத்து பராமரித்து வருகின்றனர். மலை சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதியில் அதிக அளவு இலவம்பஞ்சு விளை விக்கப்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படும்.

    கடந்த ஆண்டு 1 கிலோ இலவம் பஞ்சு ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. ஆனால் இந்த வருடம் ரூ.60க்கு மட்டுமே விற்பனையாகிறது. விவசாயிகள் மரங்களை பராமரித்து காய் பறிப்பிற்கு ரூ.1000 கூலி, காய்களை எடுக்க வரும் நபருக்கு ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில் இந்த விலை தங்களுக்கு மிகவும் குறைவு என்று வேதனையடைந்துள்ளனர்.

    இதனால் காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர். அவை தாமாக உதிர்ந்து கிழே விழுந்து வெடித்து வருகிறது. இலவம் பஞ்சை பிரித்து அதனை தலைச்சுமையாகவும், கழுதைகள் மூலமும் ஏற்றிக் கொண்டு விற்பனைக்கு செல்கின்றனர்.

    பல இன்னல்களுக்கிடையே இதனை கொண்டு செல்லும் போது உரிய லாபம் கிடைக்காததால் வேதனையடைந்துள்ளனர். எனவே அரசு இப்பகுதியில் இலவம்பஞ்சுக்கான தொழிற்சாலை அமைத்தால் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

    • கடந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
    • சீசன் துவங்குவதற்கு முன் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்

    உடுமலை :

    பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறந்தும் உரிய பலன் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சீசன் துவங்காத நேரத்தில் கொப்பரை உற்பத்தி குறைந்தும் விலை உயரவில்லை. காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, சாதாரண கொப்பரை கிலோ 80 ரூபாய்க்கும், ஸ்பெஷல் கொப்பரை 82 ரூபாய், தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) 1,770 ரூபாய், கருப்பு தேங்காய் ஒரு டன் 27,500 ரூபாய் மற்றும் பச்சை தேங்காய் ஒரு டன் 25 ஆயிரம், தேங்காய் பவுடர் ஒரு கிலோ 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் தொடரும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. சீசன் துவங்க உள்ள சூழலில் விலை சரிவு விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில நிர்வாகி கூறியதாவது:- அடுத்த மாதம் தேங்காய் சீசன் துவங்க உள்ள நிலையில் கொப்பரை, தேங்காய் விலை உயரவில்லை. கொப்பரை உற்பத்தி செய்வதால் நஷ்டமே ஏற்படுவதால், பலரும் உற்பத்தி மேற்கொள்ளவில்லை.இதனால் உலர்களங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சீசன் இல்லாத நேரத்திலும் விலை சரிவு ஏற்படுவது புரியாத புதிராகவே உள்ளது. தேங்காய் எண்ணெய், கொப்பரை தேக்கமடைந்துள்ளது. அரசு கொள்முதல் செய்த கொப்பரை என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை.

    இதற்கு ஒரே காரணமாக வெளிநாடுகளில் இருந்து பாமாயில், வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படுவதே காரணமாகும். இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு அதிக வரி விதித்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்.தற்போது கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலையை குறைத்து வரும் எஸ்.எம்.எஸ்.,க்களும், விவசாயிகளிடம் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன.

    சீசன் துவங்குவதற்கு முன் பாமாயிலுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×