செய்திகள்
செல்லியம்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
செல்லியம்பாளையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சேலம்:
உடையாப்பட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட ஆச்சாங்குட்டபட்டி மின்பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுபட்டி தாதனூர், சுக்கம்பட்டி, குப்பனூர், வலசையூர், ஆச்சாங்குட்டபட்டி, செல்லியம்பாளையம், சின்னனூர், அயோத்தியாப்பட்டணம் ஒரு பகுதியான ஆத்தூர் மெயின் ரோட்டுக்கு வடக்கு பகுதி, தைலானூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.