செய்திகள்
முக ஸ்டாலின்

கொடைக்கானலில் இருந்து மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்

Published On 2021-04-22 02:03 GMT   |   Update On 2021-04-22 02:03 GMT
கொடைக்கானலில் இருந்து மதுரை வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் மனைவி, பேரக்குழந்தைகளுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
சென்னை :

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 16-ந் தேதி தன்னுடைய மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேர குழந்தைகள் உள்பட 16 பேருடன் 2 தனி விமானத்தில் மதுரைக்கு சென்று, அங்கிருந்து கொடைக்கானலுக்கு காரில் சென்றார். அங்கு குடும்பத்தினருடன் அவர் ஓய்வெடுத்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு கொடைக்கானலில் இருந்து மதுரை வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் மனைவி, பேரக்குழந்தைகளுடன் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் சென்னைக்கு வரவில்லை.
Tags:    

Similar News