செய்திகள்
ராசிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பழனி தெருவை சேர்ந்த தறித்தொழிலாளி ஒருவரது குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பழனி தெருவை சேர்ந்த தறித்தொழிலாளி ஒருவரது குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் அந்த தெருவில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தெருவில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்த தெரு தகரம் வைத்து அடைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. தெருவில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க நகராட்சி சார்பில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.