செய்திகள்
பெரம்பலூர் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 46). விவசாயியான இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.