செய்திகள்
கொரோனா தடுப்பூசி

திருப்பத்தூரில் மனநலம் பாதித்த 82 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-04-17 14:14 GMT   |   Update On 2021-04-17 14:14 GMT
கொரோனா பரவலை தடுக்க மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 82 பேருக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடப்பட்டது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் ‘உதவும் உள்ளங்கள்’ அமைப்பின் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 140 பேர் தங்கி உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இவர்களுக்கு ஆதார் கார்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை முறைப்படி பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 82 பேருக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடப்பட்டது.
Tags:    

Similar News