செய்திகள்
தற்கொலை

கடையம் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2021-04-13 12:01 GMT   |   Update On 2021-04-13 12:01 GMT
கடையம் அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையம்:

கடையம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை சிவகாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 26). கூலித்தொழிலாளி. கடந்த 5-ந்தேதி முத்துகுமார் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து அப்பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். 

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். 

இது குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News