செய்திகள்
கோப்பு படம்.

கோயில் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி- இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

Published On 2021-04-13 10:33 GMT   |   Update On 2021-04-13 10:33 GMT
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த வாரம் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை, கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News