செய்திகள்
முத்துப்பேட்டை அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி பலி
முத்துப்பேட்டை அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் வயல் பகுதியில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆட்டுக் கிடை போட்டு மேய்த்துக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் இந்த ஆட்டுக்கிடையில் ஆடுகளை மேய்க்கும் தொழிலாளி ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த வெள்ளையன் (வயது 45) என்பவரை நீண்டநேரமாக காணவில்லை இதனையடுத்து கூட இருந்த மற்றவர்கள் அவரை தேடியபோது அப்பகுதியில் உள்ள மாங்குளம் கரையில் அவரது செல்போன் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், குளத்தில் தேடி பார்த்தபோது வெள்ளையன் உடல் மிதந்துள்ளது.
சம்பவத்தன்று வெள்ளையன் மாங்குளத்தில் குளித்து கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டு தவறி குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.