செய்திகள்
கோப்புபடம்

போத்தனூர் அருகே பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிப்பு

Published On 2021-04-09 10:19 GMT   |   Update On 2021-04-09 10:19 GMT
கோவை போத்தனூர் அருகே பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குனியமுத்தூர்:

கோவை போத்தனூர் அருகே உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி காளியம்மாள் (வயது 47). சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு பொள்ளாச்சி ரோட்டில் உள்ள காந்தி நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளிலில் காளியம்மாளை பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த காளியம்மாள் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 3½ பவுன் தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News