செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 860-ஆக உயர்ந்துள்ளது
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. நாளுக்கு நாள் மாவட்டத்தில் உயர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் நேற்று 43 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்தனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 860-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 18 ஆயிரத்து 982-ஆக உள்ளது. மாவட்டத்தில் தற்போது 651 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை சிகிச்சை பலன் இன்றி 227 பேர் பலியாகியுள்ளனர். பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்டத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் இன்னமும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருந்து வருவது பலரையும் கவலையடைய செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. நாளுக்கு நாள் மாவட்டத்தில் உயர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் நேற்று 43 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்தனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 860-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 18 ஆயிரத்து 982-ஆக உள்ளது. மாவட்டத்தில் தற்போது 651 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை சிகிச்சை பலன் இன்றி 227 பேர் பலியாகியுள்ளனர். பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்டத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் இன்னமும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருந்து வருவது பலரையும் கவலையடைய செய்துள்ளது.