செய்திகள்
கோப்புபடம்

திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

Published On 2021-04-02 13:09 GMT   |   Update On 2021-04-02 13:09 GMT
திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 74) முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராம்ஜி நகரை சேர்ந்த மருதுபாண்டி மற்றும் குணசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பழனிவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் இறந்தார். படுகாயம் அடைந்த மருதுபாண்டி, குணசேகரன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News