search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் ராணுவ வீரர் பலி"

    • பைக் மோதிய விபத்தில் ராணுவ வீரர் படுகாயமடைந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே வெங்கடாஸ்திரிகோட்டையை சேர்ந்தவர் செல்வபெருமாள்(59). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வெங்கடாஸ்திரி கோட்டைக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். வத்தலக்குண்டு சாலையில் வந்து கொண்டிருந்தபோது மீனாட்சிபுரத்தை சேர்ந்த தனபாண்டி என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து மோதினார்.

    இதில் தூக்கிவீசப்பட்ட செல்வபெருமாள், தனபாண்டி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார்.

    அங்கு செல்வபெருமாளை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    கால்முறிவு ஏற்பட்ட தனபாண்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த செல்வபெருமாளுக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

    ×