என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன்னாள் ராணுவ வீரர் பலி"
- பைக் மோதிய விபத்தில் ராணுவ வீரர் படுகாயமடைந்தார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே வெங்கடாஸ்திரிகோட்டையை சேர்ந்தவர் செல்வபெருமாள்(59). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வெங்கடாஸ்திரி கோட்டைக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். வத்தலக்குண்டு சாலையில் வந்து கொண்டிருந்தபோது மீனாட்சிபுரத்தை சேர்ந்த தனபாண்டி என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து மோதினார்.
இதில் தூக்கிவீசப்பட்ட செல்வபெருமாள், தனபாண்டி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார்.
அங்கு செல்வபெருமாளை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கால்முறிவு ஏற்பட்ட தனபாண்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த செல்வபெருமாளுக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்