செய்திகள்
கோப்புபடம்

தியாகதுருகத்தில் பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

Published On 2021-03-29 14:38 GMT   |   Update On 2021-03-29 14:38 GMT
தியாகதுருகத்தில் பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது தியாகதுருகத்தை அடுத்த புக்குளம் ஏரிக்கரை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட புக்குளம் பகுதியைச் சேர்ந்த அய்யனார்(வயது 31), கருப்பன்(33), ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் இவர்களிடமிருந்து 40 புள்ளிதாள் மற்றும் ரூ 450 -ஐ பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வெங்கடேசன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News