செய்திகள்
குடவாசல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
குடவாசல் அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடவாசல்:
குடவாசல் அத்திக்கடை புதுக்காலனியை சேர்ந்தவர் வாசன்(வயது 55). கூலித்தொழிலாளியான இவர் சிறுநீரக கோளாறு மற்றும் வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வைத்திருந்த வார்னிஷை குடித்து விட்டார்.
உடனடியாக அவரை சிகிச்சைக்காக குடவாசல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.