செய்திகள்
தற்கொலை

மார்த்தாண்டம் அருகே வெவ்வேறு சம்பவம்: பெண் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2021-03-27 12:15 GMT   |   Update On 2021-03-27 12:15 GMT
மார்த்தாண்டம் அருகே நடந்த வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே மாமூட்டுக்கடை கல்லுவிளையை சேர்ந்தவர் பாலஸ் (வயது 58). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் பாலஸ் ஊர் திரும்பினார். .இவருக்கு சுலோஜனா (45) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

சுலோஜனா கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் சுலோஜனா வீட்டில் உள்ள கழிவறையின் அருகில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பாலஸ் அருகில் சென்று பார்த்தபோது, சுலோஜனா விஷம் குடித்தது தெரியவந்தது. உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாலஸ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (43), தொழிலாளி. இவருக்கு சுஜா என்ற மனைவி உள்ளார். சரவணகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சரவணகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். இதைகண்டு அதிர்ச்சி அடந்த அக்கம் பக்கத்தினர் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணகுமார் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News