செய்திகள்
வேலைநிறுத்தம்

ராமேசுவரத்தில் மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்

Published On 2021-03-26 08:39 GMT   |   Update On 2021-03-26 08:39 GMT
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை கடலுக்கு செல்வதை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் தொடர்கதையாக உள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும்போது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 54 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (27-ந் தேதி) கடலுக்கு செல்வதை புறக்கணிக்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News