செய்திகள்
திருவள்ளூர் அருகே வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருமழிசை காமராஜர் தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக். இவரது மகன் அப்பாஸ் (வயது 19). இவர் அந்த பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு திருமண வயது வந்தவுடன் உனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி அவரை அவரது பெற்றோர் சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த அப்பாஸ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறி யில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த திருமழிசை காமராஜர் தெருவை சேர்ந்தவர் முகமது ரபிக். இவரது மகன் அப்பாஸ் (வயது 19). இவர் அந்த பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு திருமண வயது வந்தவுடன் உனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி அவரை அவரது பெற்றோர் சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த அப்பாஸ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறி யில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.