செய்திகள்
சீமான்

நாகர்கோவிலில் சீமான் இன்று பிரசாரம்

Published On 2021-03-19 09:42 GMT   |   Update On 2021-03-19 09:42 GMT
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.
நாகர்கோவில்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நாகர்கோவில் வருகிறார். இரவு 8 மணியளவில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அப்போது அவர், நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அனிட்டர் ஆல்வின், சட்டசபை தொகுதிகளின் வேட்பாளர்கள் சசிகலா (கன்னியாகுமரி), விஜயராகவன் (நாகர்கோவில்), சீலன் (பத்மநாபபுரம்), ஆன்றனி ஆஸ்லின் (குளச்சல்), பீட்டர் (கிள்ளியூர்), மேரி ஆட்லின் (விளவங்கோடு) ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்து பேசுகிறார்.
Tags:    

Similar News