செய்திகள்
கோப்புப்படம்

மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2021-03-08 01:11 GMT   |   Update On 2021-03-08 01:11 GMT
மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்
மேல்மலையனூர்:

மேல்மலையனூர் அருகே மேல்செவளாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் ஆனந்தன் (வயது 35). விவசாயி. சம்பவத்தன்று இவர் விநாயகபுரத்தில் இருந்து மேல் செவளாம்பாடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஆனந்தன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News