செய்திகள்
தற்கொலை

செட்டிபாளையத்தில் இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-03-04 09:57 GMT   |   Update On 2021-03-04 09:57 GMT
செட்டிபாளையத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணுக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.
செட்டிப்பாளையம்:

கோவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 27). இவருக்கும் தேனியைச் சேர்ந்த ஹசிகா (23) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது . சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ஹசிகா விரக்தி அடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News