செய்திகள்
சத்யபிரத சாகு

234 சட்டமன்ற தொகுதிகளுக்கு 702 பறக்கும் படை அமைப்பு- சத்யபிரத சாகு

Published On 2021-03-02 08:41 GMT   |   Update On 2021-03-02 08:41 GMT
234 சட்டமன்ற தொகுதிக்கு 702 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதோடு 3 கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும்.
மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கு 702 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதேபோல அனைத்து சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவபடைகள் 330 கம்பெனிகள் கேட்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 45 கம்பெனியினர் தமிழகம் வந்துள்ளனர். அடுத்த 2 நாட்களில் மேலும் 15 கம்பெனியினர் வர இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News