செய்திகள்
விபத்து பலி

தர்மபுரி அருகே கார் மோதி தொழிலாளி பலி

Published On 2021-03-02 03:25 GMT   |   Update On 2021-03-02 03:25 GMT
தர்மபுரி அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 23). தொழிலாளி. இவர் தர்மபுரியில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News