செய்திகள்
துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவரங்குறிச்சி:
துவரங்குறிச்சி அருகே உள்ள ஆத்துப்பட்டி பகுதியில் துவரங்குறிச்சியில் இருந்து காரைபட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துவரங்குறிச்சி அருகே உள்ள ஆத்துப்பட்டி பகுதியில் துவரங்குறிச்சியில் இருந்து காரைபட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.