செய்திகள்
திருப்பூரில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
திருப்பூரில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த திலகர்நகர் பகுதியை சேர்ந்த நல்லமுத்து என்பவரின் மகன் குணசீலன் (வயது 19). இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலா என்ற வல்லபாய் பாலா, மனோகரன், பாலாஜி, கருப்பையா, சதீஷ் உள்பட 7 பேர் குணசீலனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 7 பேரும் சேர்ந்து குணசீலனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலைமிரட்டல் விடுத்ததுடன், மரக்கட்டை, பீர் பாட்டில் ஆகியவற்றால் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து குணசீலன் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி, கருப்பையா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலா என்ற வல்லபாய் பாலா, மனோகரன், சதீஷ் மற்றும் 3 பேரை தேடி வருகின்றனர்.