செய்திகள்
வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி குண்டர் சட்டத்தில் கைது
வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
சென்னை:
வடசென்னை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, சமீபத்தில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் ரவுடிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செயின் பறிப்பு வழக்கு ஒன்றில் காக்கா தோப்பு பாலாஜி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 8 கொலை வழக்குகள், 4 கடத்தல் வழக்குகள் உள்பட 50 வழக்குகள் பாலாஜி மீது உள்ளது.
இதனை தொடர்ந்து காக்கா தோப்பு பாலாஜியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காக்கா தோப்பு பாலாஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். வடசென்னை பகுதியில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, சமீபத்தில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் ரவுடிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செயின் பறிப்பு வழக்கு ஒன்றில் காக்கா தோப்பு பாலாஜி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 8 கொலை வழக்குகள், 4 கடத்தல் வழக்குகள் உள்பட 50 வழக்குகள் பாலாஜி மீது உள்ளது.
இதனை தொடர்ந்து காக்கா தோப்பு பாலாஜியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காக்கா தோப்பு பாலாஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். வடசென்னை பகுதியில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.