செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி:
மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை அதிக அளவில் உயர்த்தி உள்ளது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஆகையால் மத்திய பா.ஜனதா அரசையும், அதற்கு துணை போகும் மாநில அ.தி.மு.க. அரசையும் கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.