செய்திகள்
தற்கொலை

ஏற்காடு அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-02-12 10:41 GMT   |   Update On 2021-02-12 10:41 GMT
ஏற்காடு அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காடு:

ஏற்காடு அருகே உள்ள அரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News