செய்திகள்
ராமநாதபுரம் அருகே சூதாடிய 10 பேர் கைது
ராமநாதபுரம் அருகே சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பஜார் போலீசார் அரண்மனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கிளப் ஒன்றில் அனுமதியின்றி சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து சிகில் ராஜவீதி இளையராஜா (வயது39), நேருநகர் முத்துமுருகேசன் (59), கீழக்கரை சேரான்தெரு நூமுகம்மது (53), முதுனாள் காசிராஜன் (45), காரிக்கூட்டம் சவுக்கத்அலி (53), கீழக்கரை மேலத்தெரு ரசாக் (54), பருத்திக்காரத்தெரு உசேன் (48), எஸ்.என்.தெரு அப்துல்லா (53), ராமநாதபுரம் பசும்பொன்நகர் பாலகிருஷ்ணன் (33), வனசங்கரி அம்மன்கோவில் தெரு ராஜசேகர் (39) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு மடிக்கணினி, ரொக்கம் ரூ.31 ஆயிரத்து 500 ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக பஜார் இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.