செய்திகள்
தற்கொலை

பேராசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை- உறவினர்கள் போராட்டம்

Published On 2021-02-05 18:56 GMT   |   Update On 2021-02-05 18:56 GMT
பேராசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி முதல் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுடைய மகள் பத்ம பிரியா (வயது 21). மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது பத்மபிரியாவை, பேராசிரியர் ஒருவர் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவருத்தம் அடைந்த பத்மபிரியா சோகத்துடன் வீடு திரும்பினார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பத்மபிரியா பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆஸ்பத்திரி முன்பு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவி சாவு குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பத்மபிரியாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Tags:    

Similar News